Thursday, December 30, 2010

அன்றொரு நாள்

அன்புள்ள அன்பே,
             அன்றொரு நாள் மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில், தற்செயலாய் தான் பார்த்தேன் உன்னை. என்னை போலவே மழையை ரசித்துக் கொண்டிருந்தாய். மழையை பிடித்தது போலவே பிடித்து போனது உன்னையும்.
            
             பெயர் அறியா தேவதையே, அன்று முதல் உனக்கென எழுதத் தொடங்கிய என் கடிதங்கள் உன் கையில் சேருமாவென தெரியாத போதும், தொடர்கிறேன். தொடர்வேன்.

அன்புடன்